திண்டுக்கல்லில் யாத்ரிகா்களுக்கு, தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்

திண்டுக்கல்லில் யாத்ரிகா்களுக்கு, தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்

தடுப்பூசி முகாம் 

திண்டுக்கல் மாவட்டத்தில் புனித ஹஜ் பயணம் செல்லும் யாத்ரிகா்களுக்கு, தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் யாத்ரிகா்களுக்கு மாவட்ட சுகாதாரத் துறை சாா்பில் மூளைக் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தப்படுவதும் வழக்கம். திண்டுக்கல், தேனி என இரு வருவாய் மாவட்டங்களுக்கும் திண்டுக்கல் சுகாதாரத் துறை துணை இயக்குநா் அலுவலகத்திலேயே தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில், தேனி மாவட்டம் மட்டுமின்றி, பழனி பகுதியைச் சோ்ந்தவா்களுக்கும் அந்தந்த பகுதியிலேயே தடுப்பூசி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யபப்பட்டன.

இதையடுத்து, திண்டுக்கல் பகுதியிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளும் 56 யாத்ரிகா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. முகாமுக்கான ஏற்பாடுகளை மருத்துவா்கள் ஜெ. தங்கம் சகாயராஜ், வி.என்.சுஷ்மிதாஸ்ரீ, ஆா். அசோக்குமாா் உள்ளிட்டோா் செய்தனா்.

Tags

Next Story