சிவகாசியில் சிறப்பு இரயிலுக்கு, சிறப்பான வரவேற்பு

சிவகாசியில் சிறப்பு இரயிலுக்கு, சிறப்பான வரவேற்பு
சிவகாசியில் சிறப்பு இரயிலுக்கு, சிறப்பான வரவேற்பு
சிவகாசியில் சிறப்பு இரயிலுக்கு, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

சிவகாசியில் தாம்பரம் கொச்சுவேலி சிறப்பு ரயிலுக்கு வரவேற்பு.. விருதுநகர் மாவட்டம், சிவகாசி ரயில் நிலையத்தில் தாம்பரம் கொச்சுவேலி சிறப்பு ரயிலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோடை கால கூட்ட நெரிசலை தவிர்க்க தாம்பரம் - கொச்சுவேலி இடையே மதுரை, ராஜபாளையம்,தென்காசி வழியாக மே 16 முதல் ஜூன் 29ம் தேதி வரை சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டது.சிவகாசி வந்த சிறப்பு ரயிலுக்கு மாலை அணிவித்து ரயில் பயணிகள் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

சிறப்பு ரயிலின் முதன்மை பைலட் ஜெபக்குமார், உதவி பைலட் மணிமாறன், ரயில் மேலாளர் டி.எஸ்.யாதவ், நிலைய அலுவலர் முத்துராஜ் ஆகியோருக்கு காளீஸ்வரி குழுமம் மற்றும் சிவகாசி ரயில் பயணிகள் சங்கம் சார்பில் பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags

Next Story