ஓசூர் அருகே கிராமத்திற்குள் புகுந்த புள்ளிமான் : தெருநாய்கள் கடித்து படுகாயம்

கிராமத்திற்குள் புகுந்த புள்ளிமானை தெருநாய்கள் கடித்து படுகாயம்
ஓசூர் அருகே உள்ள பைரசந்திரம் கிராமத்தில் உணவு தேடி விவசாய நிலங்களுக்குள் சென்று புள்ளி மானை தெரு நாய்கள் துரத்தி துரத்தி கடித்துள்ளது. அச்சமடைந்த புள்ளிமான் அங்குள்ள உமா சங்கர் என்பவரது வீட்டிற்குள் புகுந்து தாங்கமடைந்துள்ளது. இதனையடுத்து கிராம மக்கள் ஓசூர் வனச்சரகர் பார்த்தசாரதிக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் படுகாயம் அடைந்த புள்ளி மானை மீட்டு கோபசந்திரம் கால்நடை மருத்துவ முகாமுக்கு கொண்டு சென்று அங்கு கால்நடை மருத்துவர்கள் மூலம் புள்ளிமானுக்கு தீவிர சிகிச்சைகளை மேற்கொண்டனர். சிகிச்சைகள் முடிந்த பின்னர் வனத்துறையினர் புள்ளி மானை பாதுகாப்பாக பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் அவிழ்த்து விட்டனர். அப்போது புள்ளி மான் துள்ளி குதித்து காட்டு பகுதியில் ஓடி மறைந்தது.

Tags

Next Story