முதியவரை கடித்த தெரு நாய் - அச்சத்தில் மக்கள்

முதியவரை கடித்த தெரு நாய் - அச்சத்தில் மக்கள்
பைல் படம் 
தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட கீழபாறையடியில் முதியவரை தெரு நாய் கடித்து குதறும் வீடியோ காட்சிகள் வெளியாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம் தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட கீழபாறையடி 2-ம் தெருவை சேர்ந்தவர் முதியவர் தெப்பக்குளம் அருகே உள்ள பள்ளிவாசலில் தொழுகைக்கு வந்துள்ளார். அப்போது அந்தச் சாலையில் நின்று கொண்டிருந்த நாய் அவரைப் பார்த்து குறைத்தது மட்டுமில்லாமல் அவரை மீது பாய்ந்து கடித்துள்ளது. முதியவர் நாயை விரட்டும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில் அவர் மீது பாய்ந்து குதறி உள்ளது. இதனை பார்த்த இளைஞர் ஒருவர் நாயை விரட்டி முதியவரை மீட்டுள்ளார்.

தென்காசி நகராட்சி வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வெறிநாய் தொந்தரவுகள் உள்ளது என பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து புகார்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் முதியவர் ஒருவரை நாய் குதறி உள்ள வீடியோ காட்சி வெளியாகி பொதுமக்களிடம் மேலும் அதிர்ச்சி மற்றும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் சாலையில் சுதந்திரமாக சுற்றித் திரிவதில் அலட்சியம் காட்டாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story