பாமக கொள்கை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம்

பாமக கொள்கை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம்

தெருமுனை பிரச்சார கூட்டம்

செங்கல்பட்டில் பாமக கொள்கை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் தெற்கு நகர பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பேரமனூர் 17-வது வார்டுக்கு உட்பட்ட திருக்கச்சூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு பகுதியில் கொள்கை விளக்க பிரச்சார தெருமுனை கூட்டம் மற்றும் பா. ம. க கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது. கூட்டத்திற்கு மறைமலைநகர் தெற்கு நகர செயலாளர் ஜெ. அரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நகர இளைஞர் அணி செயலாளர் எஸ். ஆர். பார்த்திபன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் காயார் ஏழுமலை, 17-வது வார்டு செயலாளர் முகம்மது ரியாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பாட்டாளி மக்கள் கட்சி மாநில பொது செயலாளர் வடிவேல் இராவணன், மாநில வன்னியர் சங்க செயலாளர் திருக்கச்சூர் கி. ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டு தெருமுனை கூட்டத்தில் உரையாற்றினார்கள். முன்னதாக மாநில பொது செயலாளர் கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதில் என். எஸ். ஏகாம்பரம், பி. வி. கே. வாசு, காயரம்பேடு இ. தேவராஜ், ப. செந்தில்நாத், செல்வி கிருஷ்ணமூர்த்தி, ஆ. சுரேஷ் குமார், 17-வது வார்டு நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story