மாணவி- தந்தை திட்டியதால் விஷம் சாப்பிட்டு தற்கொலை !

மாணவி- தந்தை திட்டியதால் விஷம் சாப்பிட்டு தற்கொலை !

காவல் துறை

முறையாக பள்ளிக்குச் செல்லாத மாணவி- தந்தை திட்டியதால் விஷம் சாப்பிட்டு தற்கொலை. காவல்துறை வழக்கு பதிவு.
முறையாக பள்ளிக்குச் செல்லாத மாணவி- தந்தை திட்டியதால் விஷம் சாப்பிட்டு தற்கொலை.காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, கோடந்தூர், நாச்சிபாளையம் அருகே உள்ள மூலத்துறை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணுசாமி மகள் கண்மணி வயது 15. இவர் அருகில் உள்ள தங்கமேடு பகுதியில் செயல்படும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். அண்மை காலமாக இவர் சரியாக பள்ளிக்குச் செல்லவில்லை. இதனை அறிந்த இவரது தந்தை கண்ணுசாமி பள்ளிக்கு செல்லாததை குறிப்பிட்டு, கண்டித்து திட்டி உள்ளார். இதனால் விரக்தி அடைந்த கண்மணி பிப்ரவரி 22ஆம் தேதி இரவு எட்டு முப்பது மணி அளவில், பிஸ்கட்டில் எலி பேஸ்ட்டை தோய்த்து சாப்பிட்டுள்ளார். இதனை அறிந்த அவரது தந்தை கண்ணுசாமி உடனடியாக தனது மகளை மீட்டு, கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.அங்கு சிகிச்சையில் இருந்து வந்த கண்மணி சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கண்ணுசாமி தென்னிலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த மாணவி கண்மணி உடலை உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தென்னிலை காவல்துறையினர்.

Tags

Next Story