சிலம்பம் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வேலூர் மாணவர்

சிலம்பம் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வேலூர் மாணவர்

தங்கப் பதக்கம் வென்ற மாணவர்


வேலூர் மாணவர் சிலம்பம் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் நடைப்பெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் வேலூர் மாவட்டம், ஓட்டேரி அரசு மிக பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி விடுதியில் தங்கிப் பயிலும் கல்லூரி மாணவர் வி. சூர்யா மாநில அளவில் தஞ்சாவூரில் நடைபெற்ற சிலம்பப் போட்டிகளில் சிவகலா மற்றும் மருதாணிகலா ஆகிய போர் முறை கலைப் போட்டிகளில் தங்கப்பதக்கத்தையும்,

தேசிய அளவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சிலம்பப் போட்டிகளில் பாதசந்துலான் போர் முறை கலைப் போட்டியில் தங்கப்பதக்கமும், சிவ கலா போர் முறை கலைப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், மருதாணிகலா போர் முறை கலைப் போட்டியில் வெண்கல பதக்கமும் வென்றுள்ளார். மாணவர் சூரியா தான் பெற்ற பதக்கங்களையும், சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியனிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

Tags

Next Story