பள்ளிக்கு ஜிமெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவன்

பள்ளிக்கு ஜிமெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவன்

வெடிகுண்டு மிரட்டல்

ஜிமெயில் மூலம் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஏழாம் வகுப்பு மாணவனால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் பகுதியில் இயங்கி வரும் சிருஸ்டி தனியார் பள்ளிக்கு ஜிமெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அதனால் பதறிப் போன பள்ளியின் நிர்வாக தலைவர் சரவணன் காட்பாடி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். பின்னர், விசாரணையில் அதே பள்ளியில் பயிலும் ஏழாம் வகுப்பு மாணவன் மெயில் அனுப்பியது தெரிந்தது. மாணவனிடம் ஆசிரியர்கள் மற்றும் போலீசார் விசாரித்த போது, விடுமுறை கிடைக்கும் என்பதற்காக விளையாட்டுத்தனமாக இப்படி ஒரு மெயிலை அனுப்பியதாக கூறியுள்ளான். பின்னர் ஆசிரியர்கள் மற்றும் போலீசார் மாணவனுக்கு அறிவுரை கூறினர்.

Tags

Next Story