கிணற்றில் தவறி விழுந்த மாணவன் பத்திரமாக மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த மாணவன் பத்திரமாக மீட்பு

காவல்துறை விசாரணை


மூங்கில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணவன் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தடுமாறி அருகே உள்ள கிணற்றில் விழுந்தார் அவரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி மற்றும் வட்டத்துக்கு உட்பட்ட மூங்கப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நஞ்சுண்டன். இவரது மகன் மிதுன் சக்ரவர்த்தி, இவர் பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறான். மாணவன் இருசக்கர வாகனத்தில் பாலக்கோடு சென்று விட்டு வீட்டுக்கு வந்தான். அப்போது கட்டுப்பாட்டை இழந்து மாணவன் இருசக்கர வாகனத்துடன் வீட்டு அருகில் இருந்த 60 அடி ஆழ கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தான். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் பாலக்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலு வலர் மகேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மாணவனை உயிருடன் மீட்டனர். இந்த விபத்து குறித்து பாலக்கோடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story