தற்கொலைக்கு முயற்சித்த மாணவி உயிரிழப்பு!

தற்கொலைக்கு முயற்சித்த மாணவி  உயிரிழப்பு!

மாணவி உயிரிழப்பு

கோவையில் தற்கொலைக்கு முயற்சித்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவை சரவணம்பட்டி பகுதியில் KGISL என்ற தனியார் செவிலியர் கல்லூரி இயங்கி வருகிறது.இங்கு கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பபிஷா(18) என்ற மாணவி முதலாம் ஆண்டு நர்சிங் படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை கல்லூரி விடுதியின் கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். கீழே குதித்ததில் படுகாயமடைந்த மாணவியை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள சரவணம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story