ஆத்தூர் : இருசக்கர வாகன விபத்தில் சிகிச்சை பெற்று வந்த மாணவி உயிரிழப்பு
![ஆத்தூர் : இருசக்கர வாகன விபத்தில் சிகிச்சை பெற்று வந்த மாணவி உயிரிழப்பு ஆத்தூர் : இருசக்கர வாகன விபத்தில் சிகிச்சை பெற்று வந்த மாணவி உயிரிழப்பு](https://king24x7.com/h-upload/2024/02/29/413518-srimathi.webp)
மாணவி ஸ்ரீமதி
ஆத்தூர் அருகே தண்டராயபுரம் பகுதியில்கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட சாலை விபத்தில் சேலம் அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி ஸ்ரீமதி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு போலீசார் விசாரணை,
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தாண்டவராயபுரம் பகுதியில் கடந்த 26 ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தந்தை மகள் சாலையை கடக்க முயன்ற போது ராசிபுரத்தில் இருந்து ஆத்தூரை நோக்கி சென்று கொண்டிருந்த கார் இருசக்கர வாகனம் மீது மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை தூக்கி வீசப்பட்டது. இதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். இருவரை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக மாணவி ஸ்ரீமதியை ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நான்கு நாட்களுக்குப் பின் மாணவி ஸ்ரீமதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.நகர போலீசார் விசாரணை.
Next Story