கல்லூரி விடுதியில் இருந்து வீட்டுக்கு சென்ற மாணவி மாயம்

கல்லூரி விடுதியில் இருந்து வீட்டுக்கு சென்ற மாணவி மாயம்
பைல் படம்
கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளமோடியில் தனியார் கல்லூரி பகுதியில் கல்லூரியில் இருந்து சென்ற மாணவி மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே உள்ள வெள்ளிச்சந்தை பகுதி வெள்ளமோடியில் தனியார் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பகுதியை சேர்ந்த லட்சுமணன் மகள் ஜான்சி ராணி (21) என்பவர் கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கல்லூரிக்கு சொந்தமான விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார்.

இதற்கிடையே கடந்த 22ஆம் தேதி மாணவி ஜான்சி ராணி விடுதியில் இருந்து ஊருக்கு செல்வதாக புறப்பட்டுள்ளார். ஆனால் மாணவி வீடு போய் சேரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் மாணவி ஜான்சி ராணி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதையடுத்து மாணவியின் தாய் பஞ்சவர்ணம் என்பவர் வெள்ளிச்சந்தை போலீசில் மாயமான மகளை கண்டுபிடித்து தர புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகிறார்கள்.

Tags

Next Story