கல்லூரிக்கு சென்ற மாணவி மாயம்:போலீசார் வழக்கு பதிவு

கல்லூரிக்கு சென்ற மாணவி  மாயம்:போலீசார் வழக்கு பதிவு

கோப்பு படம் 

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த உப்பிலியபுரம் பகுதியில் கல்லூரிக்கு சென்ற மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த உப்பிலியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 18 வயதான கல்லூரி மாணவி.இவர் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.எஸ்சி கம்யூட்டர் சையின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 4 ந்தேதி வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. மாணவியின் பொற்றோர்கள்,உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் மாணவி கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்தனர்.

இந்த புகாரின் பேரில் உப்பிலியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் மாயமான கல்லூரி மாணவியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags

Next Story