கோவில்பட்டியில் குப்பை கிடங்கில் திடீர் தீவிபத்து !!

கோவில்பட்டியில் குப்பை கிடங்கில் திடீர் தீவிபத்து !!

தீயணைப்புத்துறை 

கோவில்பட்டியில் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு எட்டயபுரம் நெடுஞ்சாலையில் சிதம்பராபுரம் பகுதியில் அமைந்துள்ளது. இந்த குப்பைக் கிடங்கில் நேற்று முன்தினம் மாலையில் எதிர்பாராத விதமாக திடீரென தீப்பற்றி எரிந்தது. தீ மள மளவென குப்பை கிடங்கின் பல பகுதிகளுக்கும் பரவியது.

இதனால் கோவில்பட்டி-எட்டயபுரம் நெடுஞ்சாலையில் புகைமூட்டம் சூழ்ந்தது. அந்த பகுதியில் வாகனங்கள் கடந்து செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் கண்களில் எரிச்சலுடன், மூச்சுத் திணறலுடன் அப்பகுதியை கடந்து சென்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தர்ராஜ் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று குப்பை கிடங்கில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

டிராக்டர்கள் மூலம் கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து வரப்பட்டு தீயணைப்பு வாகனத்துக்கு மாற்றப்பட்டு 5 மணி நேரத்திற்கும் மேலாக போராடி இரவு 10 மணி அளவில் தீயை கட்டுப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது

Tags

Next Story