காட்டில் திடீரென பற்றி எரிந்த தீ

காட்டில் திடீரென பற்றி எரிந்த தீ
காட்டில் திடீரென பற்றி எரிந்த தீ
செங்கல்பட்டு மாவட்டம், காட்டுப்பாக்கம் பகுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

மறைமலைநகர் அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியில், அரசு ஆட்டுப் பண்ணை உள்ளது. இங்கு, ஆடுகளுக்கு பசுந்தீவனம் வளர்க்க, காலி இடங்கள் மற்றும் மூங்கில் புதர்கள் உள்ளன. கடந்த ஒரு மாதமாக, கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், நேற்று இந்த வளாகத்தில் இருந்த மூங்கில் புதர் திடீரென தீப்பற்றி எரிந்தது.

தீ மளமளவென பரவியது. இதனைக் கண்ட அப்பகுதிவாசிகள் மறைமலை நகர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். அதே போல, சிங்கபெருமாள் கோவில் அடுத்த சத்யா நகர் பின்புறம் உள்ள காப்புக்காட்டிற்கு, மர்ம நபர்கள் தீ வைத்தனர்.

காய்ந்த சருகுகள் அதிக அளவில் இருந்ததால், தீ கொழுந்து விட்டு எரிந்து, தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து குறித்து, மறைமலை நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story