சரக்கு வேனில் திடீர் தீ விபத்தால் பரபரப்பு

சரக்கு வேனில் திடீர் தீ விபத்தால் பரபரப்பு

சேதமடைந்த வேன் 

நத்தம் தேரடி தெருவில் நின்றிருந்த சரக்கு வேனில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு துறையினர் அணைத்தனர்.
திண்டுக்கல் மாட்டம், நத்தம் அவுட்டர் தேரடி தெருவில் நிறுத்தப்பட்டிருந்த டாடா ஏசி சரக்கு வாகனம் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் வேனின் முன்பகுதியில் திடீரென தீப்பற்றியது. இது குறித்து நத்தம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் வந்ததையடுத்து குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். இதில் வேனின் முன் பகுதி முற்றிலும் சேதமடைந்தது. இது குறித்து நத்தம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். நத்தம் நகர் பகுதியில் அடுத்தடுத்து வெவ்வேறு பகுதிகளில் தீப்பற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story