ஓடும் காரில் திடீர் தீ !

ஓடும் காரில் திடீர் தீ !

 பைல் படம்

கோவை, அன்னூர் அருகே ஓடும் காரில் திடீரென தீப்பிடித்த நிலையில், வீண் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் சாமுவேல். சி.என்.சி லேத் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.இன்று மாலை சாமுவேல் தனது நண்பருடன் பணி நிமித்தமாக தனது காரில் ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி வரை சென்று விட்டு மீண்டும் கோவை திரும்பியுள்ளார்.காரை சாமுவேல் ஒட்டி வந்த நிலையில் அன்னூர் அருகே வந்து கொண்டிருந்தபோது காரின் முன் பக்கமாக புகை வெளியேறியுள்ளது.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சாமுவேல் சுதாரித்துக் கொண்டு உடனடியாக சாலையோரம் காரை நிறுத்தி விட்டு நண்பருடன் வெளியேறியுள்ளார்.டாஷ் போர்டு பகுதியில் தண்ணீர் ஊற்ற முயற்சித்த போது எஞ்சினில் திடீரென தீப்பிடித்து கார் முழுவதும் மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதையடுத்து சாமுவேல் உடனடியாக அன்னூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார்.தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கார் மீது தண்ணீரை பீச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மேலும் சம்பவ இடத்துக்கு வந்த அன்னூர் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பரபரப்பான கோவை- சத்தியமங்கலம் சாலையில் கார் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story