வைக்கோல் போரில் திடிரென தீ

வைக்கோல் போரில் திடிரென தீ

தீவிபத்து

புதுக்கோட்டை மாவட்டம், முள்ளிப்பட்டியில் வைக்கோல் போரில் பற்றி எரிந்த தீயை தீயணைப்புத்துறையினர் போராடி அணைத்தனர்.

விராலிமலை அருகே முள்ளிப்பட்டியை சேர்ந்தவர் வசந்தா அவருக்கு சொந்தமான வைக்கோல் போரில் திடிரென தீ பிடித்தது தீயினால் வைக்கோல் போர் கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையிலான தீயணைப்புதுறை வீரர்கள் போராடி தண்ணீரைகொண்டு தீயை அணைத்தனர் இருப்பினும் 50 கட்டுகள் தீயில் கருகி நாசமானது.

Tags

Next Story