ஜேடர்பாளையம் அருகே கரும்பு தோட்டத்தில் எரிந்து நாசம் !

ஜேடர்பாளையம் அருகே கரும்பு தோட்டத்தில் எரிந்து நாசம் !

 கரும்பு தோட்டத்தில் எரிந்து நாசம்

பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே கரும்பு தோட்டத்தில் எரிந்து நாசமானது.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகேயுள்ள கண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனியப்பன் (55) விவசாயி. இவரது தோட்டத்தில் கரும்பு பயிரிட்டு இருந்தார். இந்த கரும்புகள் தற்போது வெட்டும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் கரும்புத் தோட்டத்தில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி சென்று கரும்பு தோட்டத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மளமளவென வேகமாக பரவிவதால் தீயை அணைக்க முடியவில்லை. பின்னர் இது குறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து தீ‌ மேலும் பரவாமல் தடுத்து நிறுத்தினர். இருப்பினும் ரூ. 50- ஆயிரம் மதிப்புள்ள கரும்புகள் தீயில் எரிந்து நாசமானது.

Tags

Next Story