திருப்பூர் அம்மாபாளையம் அருகே விபத்தில் தையல் தொழிலாளி பலி!

திருப்பூர் அம்மாபாளையம் அருகே விபத்தில் தையல் தொழிலாளி பலி!

போலிசார் விசாரணை

திருப்பூர், அம்மாபாளையத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற தையல் தொழிலாளி விபத்தில் பலியானார்.

விபத்தில் தையல் தொழிலாளி பலி. திருப்பூர் அடுத்த திருமுருகன்பூண்டி எம்.ஜி. ஆர் நகரைச் சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 43) தையல் தொழிலாளியான இவர் சம்பவத்தன்று இரவு திருப்பூரிலிருந்து அவிநாசி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அம்மாபாளையத்தை கடந்து சென்ற போது ஒரு பெண் திடீரென சாலையை கடக்க முயன்றுள்ளார்.

அந்த பெண் மீது மோதாமல் இருப்பதற்காக மோட்டார்சைக்கிளை வலது புறமாக திருப்பி உள்ளார். அப்போது சாலையின் மையப்பகுதியில் இருந்த தடுப்புச்சுவர் மீது மோதி அண்ணாமலை கீழே விழுந்தார். இதற்கிடையில் அந்த வழியாக வந்த வாகனம் அண்ணாமலை மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story