அரசு பள்ளிக்கு நிலம் வழங்கிய அமெரிக்க வாழ் தமிழர்

விருதுநகர் அருகே எம்.புதுப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ரூ.40 லட்சம் மதிப்பிலான இரண்டு ஏக்கர் நிலத்தை அமெரிக்க வாழ் தமிழர் மாஃபா. குருசாமி தானமாக வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம் எம் புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாஃபா. குருசாமி. இவர் திருச்செந்தூரில் உள்ள ஆதித்தனார் கலைக் கல்லூரியில் முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி குரு தேமொழி. இந்த தம்பதியினருக்கு டாக்டர் மணிவண்ணன் குருசாமி என்ற மகன் உள்ளனர் . இவர் தற்போது அமெரிக்காவில் R&D DIRECTOR உள்ளார். இந்த நிலையில் மணிவண்ணன் குருசாமி தான் பிறந்த ஊரில் உள்ள அரசு பள்ளிக்கு தன்னுடைய தாய் தந்தை நினைவாக 40 லட்சம் மதிப்பு உள்ள இரண்டு ஏக்கர் நிலத்தை அரசு உயர்நிலைப் பள்ளிக்கு தானமாக வழங்கினார். மேலும் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு தானமாக வழங்கிய இடத்தின் பத்திரத்தை மணிவண்ணன் குருசாமி அவர்களின் சித்தி பரமேஸ்வரி என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனிடம் ஒப்படைத்தார். அப்போது எம். புதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story