வந்தவாசி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

வந்தவாசி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

கோப்பு படம் 

வந்தவாசி அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வெண்குன்றம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் யாகேஸ்வரன் (வயது 30). இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார் .

சிகிச்சை பெற்றும் சரியாகாததால் மன விரக்தியடைந்த யாகேஸ்வரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வந்தவாசி தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story