கரூர் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழப்பு

கரூர் அருகே  மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழப்பு

பணி நடந்த இடம் 

கரூர் அருகே பணியின் போது எதிர்பாராத விதமாக மின் கம்பியை தொட்டதால், மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, வேலாயுதம்பாளையம் அருகே உள்ள டிஎன்பிஎல் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ராஜா வயது 40. இவர் கொத்தனாராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் மே 8ஆம் தேதி மதியம் 1:30 மணி அளவில், கரூர் மாவட்டம், க.பரமத்தி காவல் எல்லைக்குட்பட்ட, ஆரியூர் பகுதியில் உள்ள வீரக்குமார் என்பவரது வீட்டில் கட்டுமான பணியை மேற்கொண்டார்.

பணியின் போது அப்பகுதியில் தாழ்வாக சென்ற மின் கம்பியை எதிர்பாராத விதமாக தொட்டு உள்ளார் ராஜா. இதனால் மின்சாரம் தாக்கி, மூர்ச்சை ஆகி அங்கேயே கீழே விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு, கரூர் செந்தில் கேர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ராஜாவின் மகன் கவியரசு வயது 19 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், உயிரிழந்த ராஜாவின் உடலை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் க. பரமத்தி காவல்துறையினர்.

Tags

Read MoreRead Less
Next Story