குலசேகரம் அருகே பைக் விபத்தில் வாலிபர் பலி

குலசேகரம் அருகே பைக் விபத்தில் வாலிபர் பலி
உயிரிழந்த அனிஷ் .
குலசேகரம் அருகே பைக் மரத்தில் மோதிய விபத்தில் வாலிபர் பலியானர்.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள இட்ட கவேலியை சேர்ந்தவர் அனிஷ் (19). பிளஸ் 2 முடித்துவிட்டு வீட்டிலிருந்த அவர் நேற்று மாலை தனது நண்பர் நாகக்கோடு பகுதி சேர்ந்த தீபு (20) என்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

தொடர்ந்து ரெண்டு பேரும் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் திம்பகோடு பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியது. இந்த விபத்தில் அனிஷ் மற்றும் தீபு பலத்த காயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக குலசேகரம் அரசு ஆஸ்பக் திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல்சிசையாக அனிஷ் ஆசாரிப்புள்ளம் அரசு ஆஸ்பத்திரியிலும், தீபு குலசேகரத்தில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டார். இதில் இன்று காலை அனிஷ் உயிரிழந்தார். விபத்து குறித்து குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story