திண்டிவனம் அருகே கார் மோதிய விபத்தில் வாலிபர் பலி !

திண்டிவனம் அருகே கார் மோதிய விபத்தில் வாலிபர் பலி !

பலி

திண்டிவனம் அருகே கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.
விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி அருகே நாகந்தூர் அடுத்த தளவாளப்பட்டு கிராமத் தைச் சேர்ந்தவர் சின்னராஜ் மகன் மணிகண்டன் (வயது 30). இவர் மோட்டார் சைக்கிளில் திண்டிவனத்தில் இருந்து சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார். திண்டிவனம்- செஞ்சி சாலையில் விழுக்கம் கிராமத்தில் சென்றபோது, எதிரே வந்த கார் மோதியது. இந்த விபத்தில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில்ரோசணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story