சாலை விபத்தில் வாலிபர் பலி

சாலை விபத்தில் வாலிபர் பலி

சாலை விபத்தில் இளைஞர் பலி

திருச்சி மாவட்டம்,புளியஞ்சோலை அருகே இருசக்கர வாகனம் கல் மீது மோதிய விபத்தில் இளைஞர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி பெரிய மிளகுபாறை புது தெருவைச் சேர்ந்தவர் 21 வயதான கோகுல்கிருஷ்ணன். அதே பகுதி நடுத்தெருவைச் சேர்ந்தவர் 18 வயதான அருண்குமார். இவர்கள் இருவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் புளியஞ்சோலையில் இருந்து துறையூர் நோக்கி துறையூர் புளியஞ்சோலை சாலையில் மோட்டார் பைக்கில் வந்து கொண்டிருந்தனர்.

மோட்டார் பைக்கை அருண்குமார் ஓட்டி வந்துள்ளார். அப்போது புளியஞ்சோலை கோழி பண்ணை அருகே வந்து கொண்டிருந்தபோது சாலையோரம் இருந்த கல் மீது எதிர்பாராத விதமாக மோட்டார் பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம்டைந்த அருண்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது நண்பர் கோகுல் கிருஷ்ணன் படுகாயம் அடைந்தார்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த துறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த கோகுல்கிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் விபத்தில் உயிரிழந்த அருண்குமாரை மீட்டு உடற்கூறு ஆய்விற்க்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இந்த விபத்து குறித்த துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story