சேத்துப்பட்டு அருகே விபத்து - வாலிபர் பலி !

சேத்துப்பட்டு அருகே விபத்து - வாலிபர் பலி !

விவசாயி பலி

சேத்துப்பட்டு அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா பெரிய அகரம் கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார் இவரது மனைவி மங்களலட்சுமி (23). இவர்கள் இருவரும் அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய மோட்டார் சைக்கிளில் சென்றனர். வில்வராயநல்லூர் கூட்ரோடு அருகே சென்ற போது மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது. இதில் படுகாயமடைந்த சசிகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். மங்களலட்சுமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதுகுறித்து சேத்துப்பட்டு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story