தெப்பக்குளத்தில் மூழ்கி வாலிபர் பரிதாப சாவு

தெப்பக்குளத்தில் மூழ்கி வாலிபர் பரிதாப சாவு

குளத்தில் மூழ்கி பலி

தூத்துக்குடி மாவட்டம்,திருச்செந்தூர் கோயிலுக்கு சென்ற வாலிபர் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை கே.கே. நகர், ரத்தினசாமி நகரைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் கிஷோர் (28). இவர் அங்கு ஸ்டூடியோ நடத்தி வருகிறார். அவர் தைப்பூசத்தை முன்னிட்டு தனது நண்பர்கள் 4பேருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று தெப்பகுளத்தில் குளித்தபோது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தர்மர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story