குடும்ப சண்டை காரணமாக வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!

குடும்ப சண்டை காரணமாக வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!

ஊத்துக்குளியில் குடும்ப சண்டை காரணமாக வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


ஊத்துக்குளியில் குடும்ப சண்டை காரணமாக வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகாவிற்கு உட்பட்ட ரெட்டிபாளையம் மேட்டுக்கடை பகுதியைச் சேர்ந்தவர் அஜித் குமார் ( 25 ) இவருடைய மனைவி துளசி மணி (26). நேற்று முன்தினம் இரவு அஜித் குமார் அருகில் கடைக்கு சென்று வருவதாக துளசிமணியிடம் தெரிவித்து விட்டு சென்றுள்ளார். ஆனால் வீடு திரும்பவில்லை. வீட்டிலிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள காட்டுப்பகுதியில் அஜித் குமார் வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

உடனடியாக அக்கம்பக்கத்தினர் அஜித் குமாரை கீழே இறக்கி ஊத்துக்குளி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அஜித் குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து அஜித்குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு கருத்து கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story