மண்ணச்சநல்லூரில் குடும்பப் பிரச்சுனையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

மண்ணச்சநல்லூரில் குடும்பப் பிரச்சுனையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

கோப்பு படம் 

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் காந்திநகரில் குடும்பப் பிரச்சனையால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள காந்திநகரைச் சேர்ந்தவர் 42 வயதான துரைராஜ். கணவன் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக துரைராஜ் தனது மனைவியை கடந்த 4 ஆண்டுகளாக பிரிந்து தனது சகோதரருடன் வசித்து வந்துள்ளார்.

மனைவி பிரிந்து சென்றதால் மன உளைச்சலில் இருந்த துரைராஜ் வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து தகவலறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து,

சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story