திருப்பத்தூர் அருகே வாகன விபத்தில் வாலிபர் காயம்

திருப்பத்தூர் அருகே வாகன விபத்தில் வாலிபர் காயம்

மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர்

திருப்பத்தூர் அடுத்த ஆத்து மேடு பகுதியில் ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில் வாலிபருக்கு கை உடைந்ததால் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளர்.

திருப்பத்தூர் மாவட்டம் கோட்டை தெரு பகுதியைச் சேர்ந்த முபாரக் வயது 28 மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சகிப் வயது 22 ஆகிய இருவரும் எலவம்பட்டி அடுத்த ‌ ஆத்து மேடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர் அப்போது ஆத்து மேடு பகுதியைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவன் மளிகை கடைக்கு செல்ல திடீரென சாலையை கடந்துள்ளார்.

அப்போது திடீரென பிரேக் அடித்ததால் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த சகிப் என்பவர் கீழே விழுந்து கை உடைந்தது. இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்ததன் பெயரில் விரைந்து வந்த ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதன் காரணமாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சகிப் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Read MoreRead Less
Next Story