எருமபட்டி அருகே வாலிபர் கொலையா தற்கொலையா?: போலீசார் விசாரணை

எருமபட்டி அருகே வாலிபர் கொலையா தற்கொலையா?: போலீசார் விசாரணை
இறந்த பிரவீன் குமார்
எருமபட்டி அருகே வாலிபர் கொலையா தற்கொலையா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

எருமப்பட்டி ஏப்ரல் 9 எருமப்பட்டி அருகே உள்ள சிவ நாயக்கன்பட்டி ஊராட்சி எழுவம்பட்டியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார் வயது 26 பெயிண்ட் ஆன இவர் தற்பொழுது அலங்கானத்தம்பிரிவு அருகே தற்காலிகமாக குடியிருந்து வருகிறார்.

இந்த நிலையில் அலங்காநத்தம்பிரிவிலிருந்து பாலப்பட்டி செல்லும் சாலையில் உள்ள குட்டையில் பாதி இறந்த நிலையில பிரவீன் குமார் பிணமாக கிடப்பதாக எருமைப்பட்டி காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதன் பேரில் விரைந்து வந்த எருமப்பட்டி போலீசார் பாதி எரிந்த நிலையில் கிடந்த உடலை கைப்பற்றி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்

Tags

Read MoreRead Less
Next Story