பைக் மீது லாரி மோதியதில் வாலிபர் பரிதாபமாக பலி

பைக் மீது லாரி மோதியதில் வாலிபர் பரிதாபமாக பலி

கோப்பு படம் 

விளாத்திகுளத்தில் பைக் மீது லாரி மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகில் உள்ள ஜமீன் செங்கல்படை பகுதியில் வசிப்பவர் சக்கையன் இவரது மகன் சத்தியமூர்த்தி (24), இவர் நேற்று இரவு 8 மணி அளவில் குளத்தூரில் இருந்து விளாத்திகுளத்திற்கு மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தார். விளாத்திகுளம் - தூத்துக்குடி மெயின் ரோட்டில் பாலம் அருகே செல்லும்போது எதிரே வந்த ஒரு லாரி பைக் மீது மோதியயது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த சத்தியமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து விளாத்திகுளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் வழக்கு பதிவு செய்து, லாரியை ஓட்டிவந்த விளாத்திகுளம் வெளியிடுபட்டி கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் கார்த்திக் (40) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story