திருப்பூரில் ஓட ஓட விரட்டி வாலிபர் வெட்டி கொலை

திருப்பூரில் ஓட ஓட விரட்டி வாலிபர் வெட்டி கொலை

கொலை செய்யப்பட்டவர்

திருப்பூரில் ஓட ஓட விரட்டி வாலிபர் வெட்டி படுகொலை. கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் திரு.வி.க.நகர் நாவிதன் தோட்டம் பகுதியில் நேற்று இரவு 8.30 மணி அளவில் நடந்து ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் துரத்தி வந்தது. பின்னர் அரிவாளால் சராமாரியாக வெட்டி விட்டு அந்த கும்பல் தப்பியது.

இதில் நடுரோட்டிலேயே அந்த வாலிபர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இதை அங்கிருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

துணை போலீஸ் கமிஷனர் வனிதா, உதவி கமிஷனர் கார்த்திகேயன், போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையானவரின் தலை மற்றும் முகம் சிதைந்து காணப்பட்டது. கொலையானவரை அடையாளம் காணாமல் இருப்பதற்காக முகம் சிதைக்கப்பட்டு இருந்தது. இதனால் இறந்தவரை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது.

கொலையானவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து போலீசார் துப்பு துலக்கினர். அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

மோப்பநாய் ஹண்டர் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் கொலை செய்யப்பட்டவர் அந்த பகுதியை சேர்ந்த பாலமுருகன் (42) என்பது தெரிய வந்தது. பாலமுருகன் மீது ஏற்கனவே பல்வேறு கொலை வழக்குகள் உள்ளதால் அவர் முன் விரோதம் காரணமாக வெட்டி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்துள்ளனர்.

மேலும் கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story