சேலம் அருகே மர்ம உறுப்பை அறுத்து வாலிபர் கொலை

சேலம் அருகே மர்ம உறுப்பை அறுத்து வாலிபர் கொலை

கொலையான வாலிபர்

சேலம் அருகே மர்ம உறுப்பை அறுத்து வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் சூரமங்கலம் புதுரோட்டை அடுத்த பூனைகரடு பகுதியை சேர்ந்தவர் அய்யம்பெருமாள் அவரது வீட்டின் மொட்டை மாடியில் வாலிபர் ஒருவர் மர்ம உறுப்பை அறுத்த நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

அவரது வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்த கணவன்-மனைவி இருவரையும் காணவில்லை. அவர்கள் வாலிபரை கொலை செய்துவிட்டு தப்பி ஓடியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த பாலு என்ற பாலமுருகன், அவருடைய மனைவி வரலட்சுமி என்பது தெரியவந்தது.

கொலை செய்யப்பட்ட வாலிபர், திருச்சி மாவட்டம் துறையூர் ஆலந்துடையான்பட்டியை சேர்ந்த உத்திரகுமார் மகன் தியாகு (வயது 24) என்பதும் தெரியவந்தது. அவருக்கு திருமணம் ஆகி பிரியா என்ற மனைவியும், 3 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் போலீசாரின் தீவிர விசாரணையில் சுரேஷ் என்ற வாலிபர் மட்டும் சிக்கியுள்ளார்.

அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் தியாகு எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்றும், சம்பவத்தன்று என்ன நடந்தது? என்ற முழு விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags

Next Story