சேலத்தில் காதல் விவகாரத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து

சேலத்தில் காதல் விவகாரத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து

கோப்பு படம் 

சேலத்தில் காதல் விவகாரத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் ஜாகீர் அம்ம–ாபாளையம் பகுதியை சேர்ந்த அழகிரிசாமி என்பவரும், சூரமங்கலம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் காதலித்து ததிருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்துக்கு அழகிரிசாமியின் நண்பர் முல்லை நகரைச் சேர்ந்த சங்கர் (வயது 25) உடந்தையாக இருந்துள்ளார்.

இந்த காதல் திருமணம் தொடர்பாக சங்கரை, இளம்பெண்ணின் தந்தை சிராஜ் உள்ளிட்ட சிலர் தாக்கி கத்தியால் குத்தியாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி சிராஜ், அவருடைய மனைவி ஷாகீம் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story