குளத்தில் மூழ்கிய வாலிபர் சடலமாக மீட்பு 

  குளத்தில் மூழ்கிய வாலிபர் சடலமாக மீட்பு 

சுமேஷ்

பூதப்பாண்டியில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த வாலிபரின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் முதலியார் விளை பகுதியை சேர்ந்தவர் சுமேஷ் (31) இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். தற்போது விடுமுறைக்கு ஊருக்கு வந்தவர் தனது நண்பர்கள் ஓன்பது பேருடன் நேற்று மாலை பூதப்பாண்டியை அடுத்துள்ள இறச்சகுளம் அருகே ஆலமூட்டு குளத்தில் குளிக்க சென்றுள்ளார். நண்பர்கள் எல்லோரும் குளத்தில் குளித்து கொன்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக சுமேஷ் நீரில் மூழ்கியுள்ளார். உடன் சென்ற நண்பர்கள் தேடியும் கிடைக்காததால், நண்பர்கள் உடனடியாக பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்கள்.

போலீசார் சம்பவ இடம் வந்து பார்வையிட்டு, நாகர்கோவிலிலுள்ள தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்கள். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடம் வந்து குளத்தில் காணாமல் போன சுமேஷை தேடினர். இரவு வரை தேடியும் கிடைக்காத நிலையில், நேற்று காலை சுமேஷ் உடல் குளத்தில் சடலமாக மிதந்தது. சடலத்தை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த சுமேசுக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Read MoreRead Less
Next Story