மார்த்தாண்டம் அருகே 20அடி உயரத்திலிருந்து தவறி விழுந்த வாலிபர் படுகாயம்

மார்த்தாண்டம் அருகே 20அடி உயரத்திலிருந்து தவறி விழுந்த வாலிபர் படுகாயம்

காவல் நிலையம்

மார்த்தாண்டம் அருகே மின் விளக்கு அலங்கார பணியின் போது தவறி விழுந்து வாலிபர் படுகாயம் அடைந்தார்.

மார்த்தாண்டம் பழைய தியேட்டர் ஜங்ஷன் அருகே தனியார் திருமண மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் நடந்த திருமணத்திற்காக அலங்கார மின்விளக்கு பொருத்தும் பணி நடந்தது. மாத்தூரை சேர்ந்த மனோகரன் மகன் விஜய குமார் என்பவர் 20 அடி உயரத்திற்கு மேல்பகுதியில் இருந்துகொண்டு மின்விளக்குகளை பொருத் திக்கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவித மாக தவறி விழுந்ததாக தெரிகிறது. இதில் விஜயகுமாருக்கு தலை, கால் உட்பட பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த விஜயகுமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குழித் துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு விஜயகுமார் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் விசாரித்து வரு கின்றனர்.

Tags

Next Story