காதல் ஜோடியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது !

காதல் ஜோடியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது !

 கைது

இருசக்கர வாகனத்தில் வந்த காதல் ஜோடியிடம் அத்துமீறி நடந்ததோடு வழிப்பறியிலும் ஈடுபட்டதாக நபரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகா தனக்கர்குளம் அருகே உள்ள கொல்லியான்குளம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சந்திரபெருமாள் மகன் உதயப் கைதான உதயப்பிரகாஷ் பிரகாஷ் (வயது 24). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. கடந்த 24.2.2024 அன்று சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த காதல் ஜோடியிடம் உதயப்பிரகாஷ் அத்துமீறி நடந்ததோடு வழிப்பறியிலும் ஈடுபட்டதாக அவரை ஒலக்கூர் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் உதயப்பிரகாஷ் இதுபோன்ற பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் அவருடைய இத்தகைய செயல்களை தடுக்கும்பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச் பரிந்துரை செய்தார். அதன்பேரில் உதயப்பிரகாஷை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு மாவட்ட கலெக்டர் சி.பழனி உத்தரவிட்டார். இதையடுத்து உதயப்பிரகாசை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒலக்கூர் போலீசார் கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

Tags

Next Story