மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த வாலிபர் கைது

மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த வாலிபர் கைது

கைது 

சேலத்தில் தங்கையுடன் பேசுவதை கண்டித்த சகோதரரின் பைக்கிற்கு தீ வைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சேலத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 23). இவர் ஒரு இளம் பெண்ணை காதலித்தாக கூறப்படுகிறது. அவரிடம் சில நாட்களாக அந்த பெண் பேசுவதை தவிர்த்து உள்ளார். இது குறித்து தகவல் அறிந்த இளம் பெண்ணின் சகோதரர்கள் கண்டித்து உள்ளனர். இதில் ஆத்திரம் அடைந்த ஏழுமலை இளம்பெண்ணின் சகோதரர் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்தார். இதில் மோட்டார் சைக்கிள் தீயில் எரிந்து நாசமானது. இது குறித்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை கைது செய்தனர்.

Tags

Next Story