மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது!

மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களை திருடிய நபரிடமிருந்து 5 மோட்டார் சைக்கிள்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களை திருடிய நபரிடமிருந்து 5 மோட்டார் சைக்கிள்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா தலைமையில் போலீசார் வி.சி மோட்டூர் ஜங்ஷனில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த அனந்தலை கிராமத்தை சேர்ந்த அருள் (32) என்பவரை மடக்கி விசாரித்தனர். விசாரணையில் அவர் மோட்டார்சைக்கிள் திருடியதை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 5 மோட்டார்சைக்கிள்களை மீட்டனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் மற்றும் போலீசாரை மாவட்ட எஸ்பி கிரண் ஸ்ருதி பாராட்டினார்.

Tags

Next Story