கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த வாலிபர் தவறி விழுந்து உயிரிழப்பு

கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த வாலிபர் தவறி விழுந்து உயிரிழப்பு

கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த வாலிபர் தவறி விழுந்து உயிரிழப்பு

அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த வாலிபர் தவறி விழுந்து உயிரிழந்த் சம்பவம் குறித்து பாதுகாப்பு அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அவிநாசி சாலையில் உள்ள கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் தஞ்சாவூரை சேர்ந்த ராஜேஷ் என்பவர் மேஸ்திரி ஆக பணி செய்து வருகிறார். மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடப் பணியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ் குமார் (27) என்ற இளைஞர் பணியாற்றி வந்த நிலையில் அஜித் குமார் என்பவர் மேஸ்திரி ராஜேஷ் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனது தங்கையின் கணவர் ரமேஷ் குமார் ஐந்தாவது மாடியில் இருந்து கீழே தவறி விழுந்து பலத்த காயங்கள் ஏற்பட்டு மூக்கு மற்றும் வாய் வழியாக ரத்தம் கசிவதாக தெரிவித்துள்ளார்.

உடனடியாக ரமேஷ்குமார் மீட்கப்பட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சை சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரி ஹரிபிரசாத் மீது பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கட்டுமான பணியின் போது உயிரிழந்த ரமேஷ் குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக இ.எஸ்.ஐ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story