மேட்டூர் நகராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து

மேட்டூர் நகராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து

 தீ விபத்து

மேட்டூர் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து. தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேட்டூர் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளது. இங்குள்ள வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் நகராட்சிக்கு சொந்தமான சர்க்கார் தோட்டம் என்னும் இடத்தில் கொட்டப்பட்டு மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படுகிறது. இந்நிலையில் குப்பை கிடங்கில் நேற்று லேசான தீ பற்றி எரிந்தது. காற்று பலமாக வீசியதால் இன்று குப்பை கிடங்கின் பல்வேறு பகுதிகளுக்கும் தீ பரவ தொடங்கியதால் அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காணப்பட்டது. மேலும் தீ விபத்து காரணமாக அங்குள்ள பனை மரங்கள் தீக்கு இரையாகின. குப்பையிலிருந்து வெளியேறிய புகை ஒருவித வாடையுடன் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் குழந்தைகள் , பெரியவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் பல்வேறு பாதிப்புக்கு உள்ளாகினர். இது குறித்து நகராட்சி அதிகாரிகள் மேட்டூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் தண்ணீரை பீச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story