திருவேற்காடு அருகே குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து

திருவேற்காடு அருகே குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து

தீவிபத்து

திருவேற்காடு அருகே குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட கோலடி பகுதியில் மின்சார சுடுகாடு உள்ளது இதன் அருகிலேயே நகராட்சிக்குட்பட்ட பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் அதிகளவில் தேக்கி வைக்கப்பட்டு உள்ளது. அந்தப் பகுதியில் உயிரெழுத்த மின்சார கம்பமும் உள்ளது.

இந்த நிலையில் இந்த குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் பூந்தமல்லி ஆவடி பகுதியில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் தீயானது அதிகளவில் எரிந்ததால் அந்த பகுதியில் மிகுந்த புகை மண்டலமும் 19 ஏற்பட்டது மின்சார சுடுகாட்டின் அருகே பொதுமக்கள் அதிகம் வசியக்கூடிய பகுதியில் ஆபத்தை உணராமல் நகராட்சி அதிகாரிகள் மலை போல் குப்பைகளை தேக்கி வைத்து.

இருப்பதாகவும் அதன் காரணமாகவே தற்போது இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் குப்பைகளை அகற்ற ஜேசிபி எந்திரம் ஒன்றும் அதனுள் சிக்கி கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. உயர் மின்னழுத்த கோபுரம் மற்றும் வயர்கள் கீழே குப்பை கொட்டும் இடம் அமைந்துள்ளதால் பெரிய அளவில் மின்தடை ஏற்பட வாய்ப்புள்ளதாக அப்பகுதி வாசிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story