மறைமலை நகரில் கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விழா

மறைமலை நகரில் கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விழா

நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு

மறைமலை நகரில் கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது.

காஞ்சி பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் க.செல்வம் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றதைத்தொடர்ந்து செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காட்டாங்கொளத்தூர் தெற்கு,வடக்கு,செங்கல்பட்டு,மறைமலை நகர்,கூடுவாஞ்சேரி ஆகிய நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் திமுக மற்றும் அதன் தோழமை கட்சி நிர்வாகிகளுக்கு, செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன்.

தலைமையில்,காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம்,வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் லோகநாதன்,செங்கல்பட்டு,மறைமலை நகர்,கூடுவாஞ்சேரி ஆகிய நகரகழக செயலாளர்கள்,நரேந்திரன்,சண்முகம்,எம்.கே.டி.கார்த்தி ஆகியோர் முன்னிலையில் நன்றி தெரிவிக்கும் விழா நடைப்பெற்றது.

இவ்விழாவில் காஞ்சி நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து அனைவருக்கும் அணிவித்து நன்றியினை தெரிவித்தார்.

Tags

Next Story