தென்னை மரத்தின் மீது விழுந்த இடி - கொழுந்துவிட்டு எரிந்த மரம்

தென்னை மரத்தின் மீது விழுந்த இடி - கொழுந்துவிட்டு எரிந்த  மரம்

வேலூர் அருகே தென்னை மரத்தின் மீது விழுந்த இடியால் தென்னை மரம் கொழுந்து விட்டு எரிந்தது.


வேலூர் அருகே தென்னை மரத்தின் மீது விழுந்த இடியால் தென்னை மரம் கொழுந்து விட்டு எரிந்தது.
வேலூர் மாவட்டம் கணியம்பாடி அருகே மேல்வள்ளம் சிங்கிரி கோவில் பகுதியில் உள்ள சண்முகம் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் தென்னை மரங்கள் உள்ளது. நேற்று மாலை வேளையில் இடி மின்னலுடன் மழை பெய்த போது சண்முகம் நிலத்தில் உள்ள ஒரு தென்னை மரத்தின் மீது இடி விழுந்தது. அப்போது தென்னை மரம் கொழுந்து விட்டு எரிந்தது. மரத்தின் உச்சியில் தீ பற்றியதால் தீயை அணைக்க முடியாத சூழல் ஏற்பட்டது.இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story