மார்த்தாண்டம் அருகே டிப்பர் லாரி மோதி மின்கம்பம் சேதம்

மார்த்தாண்டம் அருகே டிப்பர் லாரி மோதி மின்கம்பம் சேதம்

சேதமடைந்த மின்கம்பம்

மார்த்தாண்டம் அருகே டிப்பர் லாரி மோதிய விபத்தில் மின்கம்பம் உடைந்து சேதம் அடைந்தது.

கன்னியாகுமரி மாவட்டம்,மார்த்தாண்டம் அருகில் உண்ணாமலைக்கடை, பெரும்புழி பகுதியில் மின் கம்பத்தில் அடையாளம் தெரியாத டிப்பர் லாறி மோதி, உடைந்து விழுந்தது, இதுகுறித்து அந்த பகுதி மக்கள் உடனடியாக மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர்

சம்பவ இடத்திற்கு வந்த மின்சார ஊழியர்கள் உடைந்த மின்கம்பத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அந்தப் பகுதியில் அதிக வாகன போக்குவரத்து இருப்பதால் ,பலவீனமான மின்கம்பங்களை அகற்றி புது மின்கம்பங்கள் அமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும் மின்வாரியத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story