வேலூரில் ஒரு டன் குட்கா பறிமுதல்!

வேலூரில் ஒரு டன் குட்கா பறிமுதல்!

குட்கா பறிமுதல்

ஓசூரில் இருந்து கடத்திவரப்பட்ட குட்கா பொருள்களை பறிமுதல் செய்து வேலூர் தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
வேலூர் சத்துவாச்சாரி வசந்தம் நகர் பகுதியில் குட்கா பொருள் பதுக்கி வைக்கப்படுவதாக வேலூர் மாவட்ட எஸ்பி மணிவண்ணன் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் சுமார் 12 மணி நேரத்திற்கு மேலாக தனிப்படை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், ஓசூரில் இருந்து சொகுசு காரில் சத்துவாச்சாரி வசந்தம் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு கடத்திவரப்பட்டபோது கையும் களவுமாக ஒரு டன் குட்கா பொருள்கள் மற்றும் சுனில் பட்டேல், சுமீர் நாத், குமார் ஆகிய மூவரை கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்து மூன்று லட்சம் ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்த போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு சொகுசு கார் ஈரோடு டூ வீலர்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து சத்துவாச்சாரி காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Tags

Next Story