காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு - காதலன் மரணம் !

காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு - காதலன் மரணம் !

மரணம்

சுவாமிமலை அருகே காதலனுடன் எலி மருந்து தின்ற மாணவி சிகிச்சை. காதலன் உயிரிழந்தார்.

சுவாமிமலை அருகே காதலனுடன் எலி மருந்து தின்ற மாணவி சிகிச்சையில் இருந்து வந்த காதலன் சாவு,,, தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயதான மாணவி இவர் பிளஸ் டூ படித்து முடித்துவிட்டு நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்தார்.

கடந்த 25ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் மாணவியின் தந்தை மற்றும் உறவினர்கள் மாணவியை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இது குறித்து மாணவியின் தந்தை சுவாமிமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பெயரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடிவந்தனர். மாயமான மாணவியும் அதே கிராமத்தை சேர்ந்த 22 வயது வாலிபரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்த காதலுக்கு இருவரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 25ஆம் தேதி திருச்சிக்கு சென்று அங்கு திருமணம் செய்து கொண்டனர். வீட்டிற்கு சென்றால் பெற்றோர்கள் தங்களை பிரித்து விடுவார்கள் என்பதால் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

அதன்படி அவர்கள் கடந்த 1-ம் தேதி தஞ்சாவூர் பழைய பஸ் நிலையத்திற்கு வந்து எலி மருந்து தின்றுவிட்டு இரவு அங்கேயே தங்கி உள்ளனர். மறுநாள் காலை இவர்கள் தங்களது பெற்றோரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்த நாங்கள் இருவரும் எலி மருந்து சாப்பிட்ட விபரத்தை தெரிவித்துள்ளனர்.

பின்னர் அவர்கள் கும்பகோண அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காதலன் ஏரகரமூப்ப கோயில் கோவிந்தராஜ் மகன் அஜய் வயது 22, என்பவர் பரிதாபமாக இறந்தார்.

மேலும் காதலி தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வருகிறார். மாயமான மாணவி காதலன் எலிமருந்து தின்று மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த காதலன் நேற்று இறந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதுகுறித்து சுவாமிமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story