நெடுஞ்சாலை மீடியன் மீது லாரி மோதி விபத்து

நெடுஞ்சாலை மீடியன் மீது லாரி மோதி விபத்து

 விபத்து

திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகை பகுதியில் நெடுஞ்சாலை மீடியன் மீது லாரி மோதி விபத்து.
திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகை பகுதியில் இருந்து, நேற்று டிப்பர் லாரி ஒன்று ஜல்லிகற்கள் ஏற்றிக் கொண்டு திருத்தணி நகரம் நோக்கி வந்துக் கொண்டிருந்தது. திருத்தணி நகராட்சியில், சித்துார் நெடுஞ்சாலையின் மீடியன் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக லாரி ஓட்டுனர் காயமின்றி உயிர்தப்பினார். அதிகாலையில் சம்பவம் நடந்ததால் வாகனங்கள் இன்றி நெடுஞ்சாலை வெறிச்சோடி இருந்ததால், வேறு எவ்வித அசம்பாவிதமும் நடக்கவில்லை. அதே நேரத்தில் லாரி மட்டும் சேதம் அடைந்தது. தொடர்ந்து திருத்தணி போலீசார் மீடியன் மீது மோதிய லாரியை அங்கிருந்து அகற்றினர். திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story